Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் மருந்தை தயாரித்து வருகிறது.
இந்த மருந்தை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஏழை நாடுகள் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்று ஏற்கனவே சீரம் நிறுவனம் அறிவித்து இருந்தது. இதன்படி முதலாவதாக தென் ஆப்பிரிக்காவுக்கு 15 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை அனுப்ப உள்ளது.
இதில் 10 லட்சம் டோஸ் மருந்துகள் இந்த மாதத்திலும், 5 லட்சம் டோஸ் மருந்து அடுத்த மாதத்திலும் அனுப்பப்பட உள்ளது. இந்த தகவலை தென் ஆப்பிரிக்க பாராளுமன்றத்தில் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.