Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேவல் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் - தமிழ் தேசியக்கட்சியினர் கோரிக்கை

ஜனவரி 09, 2021 11:57

ராமநாதபுரம் : பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டான சேவல் போட்டி நடத்த அனுமதிக்கக்கோரி தமிழ் தேசியக்கட்சியினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல்  திருநாள் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு போன்ற வீரவிளையாட்டுகளுடன் சிறப்பாக கொண்டாடப்படும்.

மேலும் தமிழர்களின்  பாரம்பரியத்தை போற்றும் வகையில் சிலம்பாட்டம், உரியாட்டம், சேவல்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம்.  அந்த வகையில் சேவல்சண்டை விளையாட்டும் நமது பாரம்பரியத்தை உணர்த்தி வருகிறது. 
ஆனால் சேவல் சண்டை  சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதாக கூறி அரசு அதனைத்தடை செய்துள்ளது.

 எனவே நமது பாரம்பரிய விளையாட்டான சேவல்சண்டை விளையாட்டிற்கு உள்ள தடையை நீக்கி சேவல்போட்டிக்கு அனுமதி வழங்கி தைப்பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியாக பொங்கல்  விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என தமிழ்தேசியக்கட்சியினர்  மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம்கனி தலைமையில் ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர்  தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்