![](admin/uploads/.61039474d7f294.11839237.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : அம்பாசமுத்திரத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விரைவில் நடைபெற உள்ள, தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், அம்மா மக்கள்முன்னேற்றக் கழகத்தின், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் வி.பி.குமரேசன் தலைமை வகித்தார். அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில், சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்குவது, எல்லா வாக்குச் சாவடிகளுக்குமான, பூத் ஏஜெண்டுகளை நியமிப்பது, வீடு வீடாக பிரச்சாரப்பணிகளை மேற்கொள்வது போன்றவைகள் குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உட்பிரிவான, அம்மா பேரவையின் மாவட்ட இணைச்செயலாளர் ராஜா முகம்மது, கட்சியின், ஒன்றியச் செயலாளர்கள் அம்பாசமுத்திரம் பாலையா, சேரன்மகாதேவி தெய்வநாயகம், ஒன்றிய இணைச் செயலாளர் சுப்பிரமணியன், நகரச் செயலாளர்கள் அம்பாசமுத்திரம் இசக்கிமுத்துப் பாண்டியன், மணிமுத்தாறு சுப்பிரமணியன், சேரன்மகாதேவி கணேசன் உட்பட, கட்சி கழக நிர்வாகிகள் பலரும், கலந்து கொண்டனர்.