Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் குறித்து சுகாதார பணியாளர்களுக்கான விழிப்புணர்வு ஒவிய போட்டி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் குறித்து சுகாதார பணியாளர்களுக்கான விழிப்புணர்வு ஒவிய போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி வாக்காளர் தினம் கொண்டாடபடுவது வழக்கம். அதற்காக கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஒவிய போட்டி நடத்தபட்டு வாக்காளர் தினத்தன்று பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்நிலையில் இன்று நடைப்பெற்ற ஒவிய போட்டியில் சுகாதார துறை பணியாளர்கள், அரசு மருத்துவமனை செவியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து ஆளுநர் விருது வழங்குவதற்கான போட்டியாளர்களின் தேர்வுக்கு அனுப்பி வைக்கபடும் என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்தார். இதில் சுகாதாரதுறை இணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி உள்ளிட்ட சுகாதாரதுறை மற்றும் தேர்தல் பிரிவினை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.