![](admin/uploads/.61933fbcf29602.47460426.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம் : பாஜக சார்பில் திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரம் ஸ்ரீ தேவி முத்துநாச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவினை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நம்ம ஊரு பொங்கல் என்னும் தலைப்பில் தைப் பொங்கல் விழா கொண்டாட முடிவு செய்ததின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவினை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்று பொங்கல் பானைகளில் பச்சரிசியும் சர்கரையையும் இட்டு துவக்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். முன்னதாக விழா நடைபெறும் இடத்தில் மேளதாளம் முழங்க நாட்டிய குதிரை நிகழ்ச்சியும், சிலம்பாட்ட கலைஞர்களின் பாரம்பரிய சிலம்பாட்டமும் நடைபெற்றது. மேலும் காளையாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் உள்ளிடவைகளும் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் குப்புராம் மாநில எஸ்.சி எஸ்டி
பிரிவு தலைவர் பொன்.பாலகணபதி உள்ளிட்ட நிர்வாகிககளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.