Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
இராமநாதபுரம் : சாயல்குடி அருகே நடந்த சாலை விபத்தில் தேமுதிக சாயல்குடி பேரூர் கழக கேப்டன் மன்ற செயலாளர் ஜெய்சங்கர் பரிதாபமாக பலியானார்.
கட்டிடத் தொழிலாளியான இவர் காலை 7 மணி அளவில் சாயல்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நரிப்பையூர் நோக்கி கட்டிட வேலைக்காக தனது சைக்கிளில்
சென்றுள்ளார். உறைக்கிணறு கிராமம் அருகில் அவர் செல்லும்போது போது அதிவேகமாக பின்னால் வந்த இன்டிகா கார் பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
பலியானார்.
சம்பவம் அறிந்த தேமுதிக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா விரைந்து சென்று ஜெய்சங்கர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு உடனடியான தேவைகளையும் செய்தார். அத்துடன் சாயல்குடி காவல் நிலையம் சென்ற அவர் பிரேத பரிசோதனை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுத்தார்.
பத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் பலியான சாயல்குடி பேரூர் கழக கேப்டன் மன்ற செயலாளர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.