Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்டலம் அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது - ஒன்றரை  கிலோ கஞ்சா பறிமுதல்

ஜனவரி 10, 2021 10:28

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தும் பார்க்கிங் யார்ட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு  தகவல் கிடைத்துள்ளது.

 தகவலின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலிஸார்  தண்டலத்தில் உள்ள கண்டைனர் பார்க்கிங் யார்டில் சோதனை செய்ததில்  அங்கு வாகனங்களை நிறுத்தி வரும் வட மாநில ஓட்டுநர்களுக்கு கஞ்சா  விற்பனை செய்து வந்த 2 வாலிபர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஒன்னரை கிலோ கஞ்சா மற்றும் 2 வீச்சருவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரித்ததில்  சென்னையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் செய்யாறு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என தெரியவந்தது. இவர்களை கைது செய்து விசாரித்து சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்