Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யத்தில் விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் 

ஜனவரி 10, 2021 10:29

நாகை : டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்டா மாவட்டங்களில் இரு நாள் விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் தலைமையில் துவங்கியது 200க்கு மேற்பட்ட விவசாயிகள் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500 உடனே வழங்க வேண்டும், வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் துவங்கிய இந்த நீதி கேட்டு நெடும்பயணம் நாகை,காரைக்கால்,மயிலாடுதுறை. திருவாரூர். தஞ்சை மாவட்டங்கள் வழியே நாளை 10-ம் தேதி மாலையில் தஞ்சாவூர் ராஜராஜசோழன் சிலை அருகில் நிறைவடைந்தது.

தலைப்புச்செய்திகள்