Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: "மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம்" சார்பில் காலையில், பாளையங் கோட்டையில், மதநல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. இங்குள்ள, தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி வளாகத்தில், வைத்து நடைபெற்ற இந்த விழாவில், அனைத்து மதத்தலைவர்களும், அனைத்துக் கட்சித்தலைவர்களும், கலந்து கொண்டு, கருத்துரை வழங்கினர்.
பல்வேறு சமூக சேவைகளில், மிகச்சிறப்பாக பணியாற்றிய, தனிநபர்கள், அரசியல் கட்சிகள், அரசுப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, அவர்களின் தன்னலமற்ற, பொதுச்சேவையைப் பாராட்டி, விருதுகள் மற்றும் சான்றிதழ்கள், இவ்விழாவில் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டர் பதியின், தலைமை மடாதிபதி பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின், மாநிலத்தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி, பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மைக்குரு பேராயர் அருட்தந்தை அந்தோணிசாமி அடிகள் மற்றும் சர்வக்கட்சித் தலைவர்கள் முன்னிலையில், புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம், பட்டை, ஏலம், கிராம்பு, பசுநெய் உள்ளிட்ட பொருட்கள் போடப்பட்டு, பெண்களெல்லாம் குலவையிட, பொங்கலிட்டு, பொங்கல் கொண்டாடப்பட்டது.