Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆம்பூர் அருகே இரண்டு கண்களும் இல்லாமல் பிறந்த கன்று

ஜனவரி 10, 2021 12:38

திருப்பத்தூர் : ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு  கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவர் கடந்த 25 ஆண்டு காலமாக மாட்டுபண்ணை வைத்து  மாடுகளை வளர்த்து பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான பசு ஒன்று நேற்று இரவு காளை கன்று ஒன்றை ஈன்றுள்ளது நேற்று இரவு பிறந்த இந்த கன்றுகுட்டிக்கு இரண்டு  கண்களும் இல்லாமல் இமைகள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் மாட்டின் உரிமையாளர் மிகுந்த வருத்தம் அடைந்து உள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி கால்நடை மருத்துவ உதவி அலுவலரிடம் கேட்ட போது மரபணு மாற்ற குறைபாடுகளால் இவ்வாறு கன்றுகள் பிறக்கிறது என்றும் நேற்று ஆம்பூர் அருகே  ஈச்சம்பட்டு  கலைஞர் நகர்  பகுதியில் பிறந்த இந்த கன்றுக்கு அதன் மண்டை ஓட்டிலெய கண்கள் அமைவிடம் இல்லாமல் பிறந்து உள்ளது என்றும்  இவ்வகையான குறைபாடு உள்ள கன்றுகளை தகுந்த  பராமரிப்பும் உணவு முறைகளுடன் பராமரித்தால் மற்ற மாடுகளை போலவே சாதாரணமாக வளரும் எனவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்