Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் விபரீதம்

ஜனவரி 10, 2021 12:43

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி என்ற கிராமத்தில்  மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது எருதுவிடும் விழாவை கான அங்கிருந்த ஒரு வீட்டில் மேற்கூரை மீது 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்ததால் எடை தாங்காமல் மேற்கூரை சரிந்து விழுந்தது.

இதில் மேற்கூரையின் கீழ் அமர்ந்திருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மேலும் இந்த மேற்கூரை சரிந்து விழுந்ததில் எட்டு வயது குழந்தை உட்பட இரண்டு பேர்  பலியாகினர். மேலும் பத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெரியவர்கள் என பலருக்கு கை கால்கள் முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 30 பேர் காயம் அடைந்துள்ளார்கள். காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்