Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ’நாடார்’ போராளிகள் மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா சென்னையை அடுத்த மாங்காட்டில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கடப்பூர் ராஜூ, பெஞ்சமின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ’நாடார்’ போராளிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,அனைத்து ரேஷன் கடைகளிலும் கருப்பட்டி கிடைக்க செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் கருப்பட்டி கிடைக்க அரசு பரிசீலனை செய்யும். பெருந்தலைவர் காமராஜர் இந்த மண்ணில் இருந்து மறைந்திருக்கலாம் ஆனால், அவர் செய்த சாதனைகள் இன்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது என தெரிவித்தார்.