Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்தது அதிமுக  - திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியம் குற்றச்சாட்டு

ஜனவரி 12, 2021 11:58

சென்னை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளை கடந்த ஓராண்டாக பாதுகாத்தது அதிமுக அரசு என திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் திமுக சார்பில்  அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர்  வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணி கலந்து கொண்டார். இதில் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சாலை, குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதி, பட்டா, குப்பை வாருவதில்லை என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். கூட்டத்திற்குப்பின் பேசிய மா.சுப்ரமணியம் அதிமுக  கூட்டணி ஒரு குழப்ப கூட்டணி, முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதிலேயே அது தெரிகிறது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிபிஐ தற்போது கைது நடவடிக்கை எடுத்துள்ளது. இதில்  கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

இவர்களை கடந்த ஓராண்டாக  அதிமுக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி  காரில் வைத்து சுற்றிக் கொண்டு காப்பாற்றி  வந்தார். பொள்ளாச்சி  விவாகரத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்