![](admin/uploads/.60530491d42850.37728595.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பத்தூர் : இந்தியாவிலேயே முதன் முறையாக கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியில் தொழிலாளர் துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானதொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.
இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டம் முழுவதும் 30290 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமான தொழிலாளர்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் 94 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்காகவே திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.