Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வள்ளியூர் அடுத்த மடப்புரம் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

ஜனவரி 13, 2021 10:47

நெல்லை : வள்ளியூர் அருகே உள்ள மடப்புரம் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.  நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் திருக்கல்யாணம்  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பெண்களின் கும்மி பாடல் நிகழ்வும் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்