![](admin/uploads/.5eb1041ddf2381.77231793.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : தென்சென்னை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 க்கும் மேற்பட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
தென்சென்னை அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளராக ஓபிஎஸ் சின் தீவிர ஆதரவாளரான வேளச்சேரி அசோக் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு கட்சி நிர்வாகிகளிடையே எதிர்ப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்சியில் 30 வருடங்களாக உழைத்து வருபவரை உதறி தள்ளி விட்டு புதிதாக ஒருவரை செயலாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 300 க்கும் மேற்பட்டோர் இராயபேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.