Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 ஏழுமலையான் கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை

ஜனவரி 17, 2021 07:08

திருப்பதி: இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.  38 ஆயிரத்து 421 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14 ஆயிரத்து 805 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

பக்தர்கள் சார்பில் ரூ.2.09 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்