![](admin/uploads/.5d232be7e24af4.31715433.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக நிர்வாகிகள் எம்ஜிஆரின் திருஉருவ படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.வின் நிறுவன தலைவரும், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சருமான எம்.ஜி.ஆரின், 104- ஆவது பிறந்த தினவிழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பந்தலில், எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், பகுதி அவைத்தலைவருமான என்.ஆறுமுகம் தலைமையில், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.கே.ஏ.தவுலத்பீவி, குறிச்சி டி.சேகர், அண்ணா தொழிற்சங்கத்தின், மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.முத்துவாப்பா ஆகியோர் முன்னிலையில், கட்சி நிர்வாகிகள் எம். சதக், சுண்ணாம்பு ஆர்.சங்கரன், முத்து, காசிராஜன், முருகன், செல்வம், முத்துக்குமரன் மற்றும் அஜீஸ் உட்பட, அனைவரும், மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.