![](admin/uploads/.6098ddb11ada08.65876860.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை : மறைந்த எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கோவை மாவட்ட தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் முன்னிலையில், அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை, எம்ஜிஆர் சிலை, ஜெயலலிதா சிலை என மூன்று சிலைகள் உள்ளது.
இந்த நிலையில் எம்ஜிஆரின் 104 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியினை முன்னிட்டு, எம்ஜிஆர் சிலை, அம்மா சிலை, அண்ணா சிலை என அனைத்து சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி கோவை அண்ணா சிலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தின் சார்பில், எம்ஜிஆரின் புகைப்படமானது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வாகனம் மூலமாக ஊர்வலமாக கொண்டுவரபட்டது.
இதில் ஏராளமான கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும், கட்சி அலுவலகத்தில் திரளாக கூடி இருந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திரு உருவ சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.