Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்மியடித்து சூரிய பகவானை வழிபட்ட கிராமப்புற பெண்கள் 

ஜனவரி 17, 2021 10:07

நாகை : காணும் பொங்கலை முன்னிட்டு வேதாரண்யம் அருகேயுள்ள கிராமப்பகுதிகளில் பெண்கள் கும்மியடித்து சூரிய பகவானை வழிபட்டனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைகளுள் ஒன்றான காணும் பொங்கலையொட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்பியமணக்குடி கிராமத்தில் பெண்கள் கும்மியடித்து  கொண்டாடி மகிழ்ந்தனர்.  பின்னர் பொங்கலிட்டு சூரியபகவானை வழிபட்டனர்.

அப்போது  சிறுமியை நடுவில் நிற்க வைத்து கிராமத்து பெண்கள் கும்மியடித்து பாட்டு பாடினர் .  தொடர்ந்து படையல் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்று  குளத்தில் விட்டு மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்