Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி

ஜனவரி 17, 2021 10:14

பெரம்பலூர் : நாட்டார் மங்கலம் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் அசத்தினர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் கலைப் போட்டிகள் நடைபெறும். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் , ஆலத்தூர் வட்டம்,நாட்டாரமங்கலம் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி காலை முதலே களை கட்டியது நாட்டர் மங்கலம் கிராமம்  ஒட்டப்பந்தயம்,இசை  நாற்காலி, தண்ணீர் நிரம்புதல்,சைக்கிள் ரேஸ்,கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினர். அதனை தொடர்ந்து கலை நிகழ்வு போட்டிகள் நடைபெற்றது.கண் கவர் கலை நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் நடனம் ஆடிய நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது விளையாட்டு  போட்டிகள் மற்றும், கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை நாட்டார்மங்கலம் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள்,முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்