![](admin/uploads/.5d258084f11388.61427960.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கல்பட்டு : தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கபட்ட புதிய உயர்மின் கோபுரத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.ஆர்.ராஜா அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கிவைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிட்லப்பாக்கம் ஜட்ஜ் காலனி, காமகோட்டி நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் சந்திப்பில் உயர்மின் கோபுரம் அமைத்து தர திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்து கோரிக்கை வைத்தனர்.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற ஸ்ரீ பெரும்புத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவரது மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் நிதி ஒதுக்கி புதிய உயர்மின் கோபுரத்தை கட்டிமுடித்தனர்.
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட உயர்மின் கோபுரத்தை மக்களுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா குத்துவிளக்கேற்றி
கல்வெட்டை திறந்துவைத்தார். உடன் சிட்லபாக்கம் செயல் அலுவலர் என்.லதா, சிட்லபாக்கம் பேரூர் திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயந்தி, 18வது வார்டு திமுக செயலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.