Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பறவை காய்ச்சல் எதிரொலியால் செங்கோட்டையை பார்வையிட தடை

ஜனவரி 20, 2021 11:15

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு சுமார் 15 காகங்கள் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகள், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் ஒரு காகத்தின் மாதிரியில், பறவை காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, வருகிற 26-ந் தேதி வரை, டெல்லி செங்கோட்டை வளாகத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்