![](admin/uploads/.6118a38a8b2dc9.26830108.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருக்கும் நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் அணி வகுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தமிழக விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் கடந்த 15 நாட்களில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாயும் மற்ற தானியங்களுக்கு ஏக்கருக்கு 20ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்க சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து இருவர் மட்டும் எம்ஜிஆர் சிலைக்கு செல்ல அனுமதி அளித்தனர். இதனால் மீதமுள்ள விவசாயிகள் தீடீர் என சாலையில் படுத்து மறியலில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.