Monday, 8th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சசிகலா குணமடைய வேண்டி திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அமமுக சிறப்பு பூஜை

ஜனவரி 22, 2021 11:42

திருச்சி : உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் குணமாக வேண்டி திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அமமுக சார்பில் சிறப்பு பூஜை நடத்தினர்.

பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா வருகிற 27 ந்தேதி விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலா பூரண குணமடைய வேண்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்ஜிஆர் மன்ற மாநகர் மாவட்ட இணைச்செயலாளரான  ஒத்தக்கடை  செந்தில் மற்றும் வழக்கறிஞர் உமா ஆகியோர் சார்பில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நிர்வாகிகளுடன் சிறப்பு பூஜை நடத்தினர்.

அப்போது ஒத்தக்கடை செந்தில் மக்கள் ராஜ்யம் செய்தியாளர்களிடம் கூறும்போது... சசிகலா பூரண நலத்துடன் தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதா கூறியதுபோல் அனைத்து இந்திய அண்ணா திராவிட   முன்னேற்ற கழகத்தை 100 ஆண்டுகள் தாண்டி ஆயிரமாண்டு வழிநடத்த வேண்டும் என்றார். 

சசிகலா பூரண குணமடைய வேண்டும் என்று திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை  நடத்தி வேண்டுதல் வைத்துள்ளோம். சசிகலா அவர்கள் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இன்னமும் நீடித்து கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த  நான்காண்டுகளில் இல்லாமல் இப்போது திடீரென்று உடல் நலக் குறைவு என்ற செய்தி கேட்டு அனைவரும்  மனமுடைந்து வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்