Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் போலீசார் நடவடிக்கை

ஜனவரி 22, 2021 12:00

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விமான பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அருண்பாண்டி என்பவர் கடத்தி வந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான 158 கிராம் தங்கம், புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 188 கிராம் தங்கம், பெரம்பலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவர் கடத்தி வந்த ரூ. 8.12 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கத்தையும், சார்ஜாவில் இருந்து வந்த திருச்சியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடமிருந்து ரூ. 9.41 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

 வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இன்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ. 35 லட்சத்து 9 ஆயிரத்து 495 ரூபாய் மதிப்பிலான 693 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்