Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெடிவிபத்தில் 8 பேர் பலி பிரதமர் மோடி இரங்கல் - கர்நாடகம் 

ஜனவரி 22, 2021 01:39

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே ரெயில்வே குவாரி பகுதியில், வெடி பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.  இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, தனது கவலையை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘சிவமொக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்குகிறது’ என்று கூறி உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்