Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளக்குறிச்சியில்   புதிய காவலர் குடியிருப்பை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் 

ஜனவரி 23, 2021 09:45

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி அருகே கோட்டைமேட்டில் 3 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 22  காவலர் குடியிருப்பு கட்டிடத்தை  சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில்  நடைபெற்ற  நிகழ்வில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். 

தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்பில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் உட்பட 22 காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்புச்செய்திகள்