Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுக்குமாடி குடியிருப்பில்  புகுந்த சாரைப்பாம்பு - தீயனைப்பு வீரர்கள் மீட்டனர்

ஜனவரி 23, 2021 09:47

சென்னை: வளசரவாக்கத்தில் பாடகர் மனோ வீட்டின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  புகுந்த சாரைப்பாம்பை தீயனைப்பு வீரர்கள் மீட்டு சென்றனர். வளசரவாக்கத்தில் பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் வீடு உள்ளது.

இவரது வீட்டின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரை தளத்தில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு  ஒன்று புகுந்தது இதைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் இதையடுத்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் விருகம்பாக்கம் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் பதுங்கியிருந்த சாரைப் பாம்பை பிடித்து கோணிப்பையில் போட்டு மீட்டு எடுத்து சென்றனர்.

தீயணைப்பு வீரர்கள் பாம்பைப் பிடிக்கச் சென்ற போது அவர்களுக்கு போக்கு காட்டிய பாம்பை போராடி மீட்டு சென்று வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர் .அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

தலைப்புச்செய்திகள்