Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் ஆட்சி மாற்றம்: டிடிவி தினகரன்

ஏப்ரல் 04, 2019 03:08

அரவக்குறிச்சி: கரூர் பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே திறந்த வேனில் நின்றவாறு டி.டி.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல்களும் இணைந்து வருகிறது. தமிழக அரசு, மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. 18 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 8 தொகுதிகளில் தோல்வியை தழுவினால் இந்த அரசு வீட்டிற்கு சென்று விடும்.  

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவித்தால், அது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும்.  இந்தியாவின் பிரதமரை தமிழகத்தை சேர்ந்த நீங்கள்தான் தீர்மானிக்கப் போகிறீர்கள் என அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்