Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திவிர பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

ஏப்ரல் 05, 2019 05:21

இராமநாதபுரம்: பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து இன்று முரசொலி நிர்வாக இயக்குநரும்,திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். 

பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக  காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தது. தற்போது நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும்.  கிராமங்களின் வாழ்வாதரம் உயர்த்தப்படும். 

நான் பிரச்சாரம் மேற்மொள்ளும் இடங்களில் தாய்மார்கள் அதிகளவில் கூடுவது மட்டுமல்லாமல் அப்பா (ஸ்டாலின் ) எப்படி இருக்கிறார்கள் என பாசத்தோடு கேட்கிறார்கள்.  இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.  மேலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் நாவஸ்கனிக்கு உங்களது வாக்குகளை அள்ளிகொடுங்கள். மதவாத கூட்டணியை ஒருபோதும் அனுமதிக்காதிர்கள் என்றார். 

 
 

தலைப்புச்செய்திகள்