Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

ஜனவரி 25, 2021 12:40

புதுக்கோட்டை : தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு பொது அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், தாசில்தார் முருகப்பன் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி வழியாகபேரணி நகர் மன்றத்தில் சென்றடைந்தது. இப்பேரணியில்18 வயது  பூர்த்தி அடைந்த மாணவ மாணவிகள்மற்றும் மகளிர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நகர் மன்ற வளாகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகு வாக்காளர்அட்டையினை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

தலைப்புச்செய்திகள்