Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : வள்ளியூர் அருகே உள்ள மடப்புரம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் தைத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் தை மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தை மாதத்தைத்தையொட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி உற்சவ மூர்த்திகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகள் ஊஞ்சலில் அமர்ந்து சேவை சாதித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருவீதி உலா இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது எம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் இருந்து துவங்கிய சப்பர பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.