Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியரசு தினம் - கொடியேற்றினார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

ஜனவரி 26, 2021 01:10

புதுக்கோட்டை  : இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

72வது குடியரசு தினம்  இந்திய முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி  தேசிய கொடியினை ஏற்றி வைத்து  பின்னர் ஆயுதப்படை ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி தலைமையிலான காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 63 காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். மேலும் இவ்விழாவில் வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை,  கால்நடைபராமரிப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த 162 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் புதுக்கோட்டை மேல 3ம் விதியில்  சுதந்திர போராட்ட தியாகி சிவப்பிரகாசம் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி மணிமேகலைக்கு கதர் ஆடை அணிவித்து பரிசு வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், நமணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் "சார்ட் பேப்பரால்" உருவாக்கப்பட்ட இந்திய ராணுவ தளவாட மாதிரிகள் வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். 

இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி, மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் பாஸ்கர், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்