Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூவர்ணக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்‌ மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா

ஜனவரி 26, 2021 01:12

கள்ளக்குறிச்சி : குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய திருநாட்டின் மூவரணக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்‌ மாவட்ட ஆட்சியர் கிரண்  குராலா. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய திருநாட்டின் 72 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இந்திய திருநாட்டின்  மூவர்ணக்கொடியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் இணைந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை  ஏற்றுக்கொண்டனர்.மேலும் சமாதனத்தை பறைசாற்றும் வகையில் வெள்ளைப்புறாக்கள் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஜியாவுல் ஹக் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா பறக்கவிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 29 காவலர்களுக்கு முதல்வரின் காவலர் பதக்கம் மற்றும் கேடயங்களையும்,26 துறைகளையும் சேர்ந்த 184 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்