![](admin/uploads/.5ce4dbf2a10568.86063217.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர் : பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையை சேர்ந்த தாஜ்தீன் அசினா தம்பதியினரின் மகன் மஹபூப் பாஷா. தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் விளையாடச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். 3 நாட்கள் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை.
தீயணைப்புத்துறையினர் ஒரு நாள் மட்டுமே தேடி வந்த நிலையில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாக கூறி தேடுதலை நிறுத்தியுள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் ஏ பி வாய்க்கால் தண்ணீர் செல்வதை நிறுத்தி தனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.