Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூன்று நாட்கள் ஆகியும் இறந்த மகனின் உடல் மீட்கப்படாத  தாயின் சோகம்

ஜனவரி 26, 2021 01:19

திருப்பூர் : பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையை  சேர்ந்த தாஜ்தீன் அசினா தம்பதியினரின் மகன் மஹபூப் பாஷா. தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் விளையாடச் சென்ற  பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார்.  3 நாட்கள் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை.

தீயணைப்புத்துறையினர் ஒரு நாள் மட்டுமே தேடி வந்த நிலையில்  தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாக கூறி தேடுதலை நிறுத்தியுள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் ஏ பி வாய்க்கால் தண்ணீர் செல்வதை நிறுத்தி தனது மகனின் உடலை மீட்டுத்தர  வேண்டும் என வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்