![](admin/uploads/.5c7643ec7a34a6.12980056.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை : 960கிலோ ரேஷன் பொருள் கடத்தியவர்களை காவல் துறையினர் பிடித்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி , புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் முருகானந்தம், தலைமை காவலர் தேவ தயவு, தலைமை காவலர் பன்னீர்செல்வம், ஆகியோர் ஏத்தநாடு வம்பரம்பட்டி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அம்பு ராணி, மேலத் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் பெரியசாமி (50) மற்றும் அம்பு ராணி மேல தெருவைச் சேர்ந்த மணி மகன் பாண்டியராஜன் (32) ஆகியோர் பொலிரோ பிக்கப் வேனில் ரேஷன் அரிசி சுமார் 960 கிலோ கடத்தி சென்றுள்ளனர். அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து திருமயம் கிளை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.