![](admin/uploads/.623c081903af58.49375215.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை : வேதாரண்யத்தில் 72 வது குடியரசு தினவிழாவையொட்டி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கமலா அன்பழகன் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.
ஒன்றியக்குழு துணைத் தலைவர் அறிவழகன், ஆணையர் ராஜு உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிட வளாகத்தில் 72-வது குடியரசு தினத்தையொட்டி தியாகி சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோருடைய திருஉருவ சிலைகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி வி ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.