Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில்களை பாராமரிக்கவும் கோவில் நிலங்களை மீட்கவும் மனு அளிக்க முடிவு

ஜனவரி 27, 2021 01:03

சென்னை : இந்து கோவில்களை பாராமரிக்கவும், கோவில் நிலங்களை மீட்கவும் அகில இந்து ராம ராஜ்ஜியம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக மாநில ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை வேளச்சேரியில் தனியார் விடுதி ஒன்றில் அகில இந்து ராம ராஜ்ஜியம் தமிழ்நாடு பிரிவு சார்பில் மாநில ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் ஸ்ரீராம் ஜி தலைமையில்  நடைபெற்றது, மாநில மகளிர் அணி தலைவர் திருமதி பேச்சியம்மாள் முன்னிலை வகித்தார்.

மாநில தலைவர் கே.சீனிவாசன் ஜி சிறைப்பு அழைப்பாளராகவும் மற்றும் தென்னிந்திய செயலாளர், எம்.சசிகுமார் ஜி, கர்நாடக பிரிவு மாநில தலைவர் ஆர்.சீனிவாசன் ஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஆலோசனை கூட்டத்தில்  பராமரிப்பின்றி சிதிலமடைந்த இந்து கோயில்களை பராமரிக்க மனு அளிப்பது, ஆகிரமிப்புளில் சிக்கியுள்ள கோவில் நிலங்களை மீட்பது, போன்ற முக்கிய தீர்மானங்கள் குறித்து முடிவெடுத்தனர்.

மேலும் இந்து தெய்வங்களையும், புராண நூல்களையும் இழிவு படுத்துபவர்களை அகில இந்து ராமராஜ்ஜியம் சார்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  கோவிலில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு ஆகும் முழு செலவை அரசே ஏற்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அரசிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்