![](admin/uploads/.5dfcac25b1f9f2.46395791.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சீர்காழி:- சீர்காழியில் நகை கடை ஊழியரை கொலை செய்து வீட்டில் வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை கொன்று 17 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளை கும்பலை போலீசார் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர். கொள்ளையர்களை விரட்டி செல்லும்போது தப்பி ஓடிய ஒரு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.