Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய தாலுகா கட்டிடத்தை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஜனவரி 29, 2021 08:24

திருநெல்வேலி: கடையநல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய தாலுகா கட்டிடத்தை உடனே திறக்க வலியுறுத்தி  அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து சமூக நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கட்டி முடிக்கப்பட்ட புதிய தாலுகா கட்டிடம் முன்பு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் செய்து சுலைமான் வரவேற்று பேசினார். பின்னர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது மசூது, தி.மு.க. நகர செயலாளர் சேகனா, ஒன்னிய செயலாளர் செல்லத்துரை, காங்கிரஸ் கட்சி சார்பில் சண்முகவேல், சிபிஐ மாவட்ட செயலாளர் இசக்கி துரை, சிபிஎம் ராஜசேகர், மாநில விவசாய அணி திமுக துணைச் செயலாளர் அப்துல் காதர்,  விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் டேனியல் அருள்சிங், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டட தலைவர் முகமது யாகூப், எஸ்டிபிஐ நகரச் செயலாளர் யாசர்கான், வாழ்வுரிமை கட்சி முகைதீன்,  மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் சைபுல்லா ஹாஜா ஆகியோர் பேசினார்கள்.

இறுதியில் மாவட்ட முஸ்லிம்லீக் செயலாளர் இக்பால் நன்றியுரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கடையநல்லூர் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறக்க வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 2ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் கடையநல்லூர் புதிய தாலுகா கட்டிடத்தை திறக்க கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்