Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

ஜனவரி 29, 2021 08:26

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பட்டை அணிந்து, செவிலியர்கள்  போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான, ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா காலங்களில் பணிபுரிந்ததற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பணிகள் பாதிக்காத வகையில் கருப்பு பட்டை அணிந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து செவிலியர்களும் அறவழியில் போராட்டம் நடத்தினர்.  

இந்த போராட்டத்தால், எந்த வகையிலும், பணிகள் பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்