Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க.வின் மக்கள் கிராமசபை கூட்டம்

ஜனவரி 29, 2021 08:29

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்குளத்தில், தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா பங்கேற்றார். 

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்னும் தி.மு.க.வின் பிரச்சாரத் திட்டத்தின் மக்கள் கிராமசபை கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் செங்குளத்தில் நடைபெற்றது. "அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்!" என்ற தலைப்பிலான இந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா பங்கேற்று, கூடியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில், பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரிவண்ணமுத்து மற்றும் பிற நிர்வாகிகள் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

தலைப்புச்செய்திகள்