Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்-ஜே.பி.நட்டா 

ஜனவரி 30, 2021 06:16

மதுரை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக, தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்து சேர்ந்த ஜே.பி. நட்டாவுக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் தேர்தல் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது.  தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில், 3 நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை வந்த ஜே.பி. நட்டா, தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார்.  அவர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.  அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.  அவரை காண மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்