Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- மமக தலைவர்

ஜனவரி 31, 2021 12:04

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்: உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு பக்கத்துணையாக இருந்து நோயாளிகளை காக்கும் செவிலியர்கள் தற்போது தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சேவையாற்றிய முன்களப் பணியாளர்களில் செவிலியர்களின் பங்கு முதன்மையானது.

கொரோனா காலத்தில் செவிலியர்கள் செய்த சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்றும் மேலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கு பணிப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைப்புச்செய்திகள்