Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பாசமுத்திரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 01, 2021 08:30

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், புதிய வேளாண் சட்டங்களை, திரும்பப்பெற  வலியுறுத்தி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளை,  முற்றிலும் பாதித்திடும் வகையில், மத்திய அரசு  அண்மையில் கொண்டு வந்துள்ள, 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், அவற்றை  உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்,  திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், "கோரிக்கை  முழக்க மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்தினர். 

பாரத ஸ்டேட் வங்கி எதிர்புறம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலாளர்  பீமாராவ் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டலச் செயலாளர் ஐகோர்ட் பாண்டியன், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் டேனிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், மணிமுத்தாறு நகரச் செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

தலைப்புச்செய்திகள்