Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் துணி பைகளில் லட்டு விநியோகம்

பிப்ரவரி 01, 2021 01:30

திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கி செல்ல தேவஸ்தானம் பிளாஸ்டிக் கவர்களை 2 ரூபாய்க்கு வழங்கி வந்தது. அதன்பிறகு கவரின் விலை ரூ.3 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை தடுக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்தது.

இதனால் தேவஸ்தானம் லட்டு கவருக்கு மாற்று ஏற்பாடு செய்தது. அட்டை பெட்டியில் லட்டை கொண்டு செல்ல முதலில் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் அதை கொண்டு செல்வதில் சிரமம் மற்றும் லட்டு பிரசாதத்தில் உள்ள நெய் அட்டை பெட்டிகளால் உறிஞ்சப்பட்டது. அதனால் லட்டின் தரம் பாதிக்கப்பட்டது. எனவே தேவஸ்தானம் அதை கைவிட்டது. பின்னர் வழக்கம்போல் 50 மைக்ரானிற்கு மேல் உள்ள லட்டு கவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

தற்போது லட்டு கவருக்கு மாற்றாக சணல் பைகள், காகிதப் பைகள், துணி பைகள் என பல்வேறு வகைகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த பைகளின் உட்பகுதியில் நெய் உறிஞ்சப்படுவதை தடுக்க ஆயில் காகிதம் உள்ளது. இதனால் லட்டின் தரம் பாதுகாக்கப்படுகிறது. துணி பைகள் ரூ.11, ரூ.9 விலையிலும், காகிதப் பை ரூ.5-க்கும், சணல் பைகள் ரூ.15, ரூ.25 என விற்கப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் விலையில் லட்டு பைகளை வாங்கி கொள்ளலாம்.

தலைப்புச்செய்திகள்