Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவர்னர் உரைக்கு எதிர்ப்பு -திமுக வெளிநடப்பு

பிப்ரவரி 02, 2021 12:10

சென்னை: 2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, கவர்னர் உரையாற்றி வருகிறார்.  கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
 

தலைப்புச்செய்திகள்