Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: கரூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: பாஜ.,வை குற்றம்சாட்டி பேசிய தம்பிதுரை தற்போது பா..ஜ.,வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். மோடியை எதிர்த்து பேசுகிறேன் எனக்கூறும் தம்பிதுரை கரூர் தொகுதிக்கு என்ன செய்துள்ளார். தற்போது தம்பிதுரையை மக்கள் விரட்டி கொண்டுள்ளனர். கரூர் தொகுதி குறித்து தம்பிதுரை சிந்திக்கவில்லை.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வர அனுமதிக்கவில்லை. இந்த தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தது தானே என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திமுகவுக்கு பயந்தே துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.