![](admin/uploads/.5d5cdb57328577.67848820.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை ஆதரித்து முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: திமுகவிற்கு எதிராக கட்சி துவக்கியவர் வைகோ. கவுன்சிலர் கூட ஆக முடியாதவர் என ஸ்டாலினை விமர்சனம் செய்த வைகோ, தற்போது, அவரை முதல்வர் ஆக ஆக்க போவதாக கூறுகிறார். திமுகவிற்கு எதிராக கட்சி ஆரம்பித்துவிட்டு, அக்கட்சி சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டது அதிமுக கூட்டணி. எதிர்க்கட்சியாக இருக்கும் போதே திமுகவினர் அராஜகம் செய்கின்றனர். வேலூரில் நடந்த சோதனையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது. வாக்காளர்களை பணம் கொடுத்து திமுக வாங்க முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.